Powered By Blogger

Thursday, April 26, 2007


நியூட்டனின் ஈர்ப்பு விசை
ஆப்பிளில் தொடங்கியது,
உன் விழி ஈர்ப்பு விசையோ
ஆதாம் ஆப்பிளில் முடிகிறது..........

உன் பாதச் சுவடுகளை
பார்த்த பின்புதான் அறிந்தேன்,
உனக்கு கால்களாலும்
கோலம் போடத் தெரியுமென்று...........



வைகறையில் நீ கோலமிடும்
அழகை ரசிக்கத்தான்,
இந்த வானம்
தன் கோடி கண்களுடன்
விடிய விடிய கத்திருக்கிறதோ...............

Saturday, April 07, 2007


நீ கண் சிமிட்டும் போது மட்டுமே
நீ தேவதையில்லை என்பதை
நான் உணர்கிறேன்....

சித்திரை மாதத்து நண்பகலோடு
பயணித்துக் கொண்டிருந்தது பேருந்து,
சித்திரை பௌர்ணமியாய்
உன்னையும் ஏற்றிக் கொண்டு............


நிலவை சுற்றும் பூமியாய்,
நான் உன்னை என் எண்ண்ங்களால்
சுற்றிக் கொண்டிருந்தேன்


கோடைக் காலத்தில் சாரலாய்
காற்றில் இசை மழையை
தூவிக் கொண்டிருந்தது வானொலி

நீ பார்க்காத போது நானும்
நான் பார்க்காத போது நீயும்
மாறி மாறி பார்த்துக் கொண்டோம்


நாம் இறங்க வேண்டிய நிறுத்தம் வந்ததும்
நீ முன் படிக்கட்டுகளில் கீழிறங்கினாய்!
நான் உன்னைப் பார்த்து கொண்டே
பின் படிக்கட்டுகளின் வழியே கீழிறங்குகையில்,


"அவள் எப்போது மீண்டும் வருவாள்"
என மெல்லிய குரலில் என்னிடம் கேட்டது பேருந்து............
நான் வரும்பொதுதான் அவளும் வருவாள்
என்றேன் நான் பேருந்தைப் பார்த்து
புன்னைகைத்த படியே................


அதை கேட்டதும்
என்னைப் பார்த்து முறைத்தபடியே
நகர்ந்தது பேருந்து......................................