அடைமழைக் காலத்தில் உன் உடை தேகம் நனையாமலிருக்க ஒரு குடையுடன் காத்திருக்கிறேன் நான்!
நீவரும் வரை என் கால் நனைத்துப் போகும் செம்மண் மழைநீரை பார்த்திருக்கிறேன்!
சாலையின் இடையில் உள்ள ஒரு வளைவில் இருந்து நீ என் காட்சிக்கு புலப்படத் தொடங்குகிறாய்!
மழையை ரசித்து வரும் நீ, எனைப் பார்த்ததும் வெட்கம் காட்டி தலை குனிகிறாய்! தரையில் மழைநீர் உன் முகம் காட்டுகிறது!
உனக்கும் எனக்கும் இடையில் முன்பு நூறு மழைத் துளிகள் விழுந்தன! அது பத்தாகக் குறையும் போது நீ என் அருகில் நிற்கிறாய்!
என் கைகளில் உள்ள குடையை உன்னிடம் தர முற்படுகையில் நீ வானம் பார்த்து சிரிக்கிறாய்!
இப்போது மழை நின்று இலேசான தூறல் மட்டுமே தொடர்கிறது! குடைக் கம்பிகளை நான் மடிக்க அது மழைநீரை கண்ணீராய் வடிக்கிறது! நீ எனைத் தாண்டி முன் செல்கிறாய் நான் உன்னை பின் தொடர்கிறேன்! நீ நடக்கும் போது உன் பாதங்கள் மழைநீரை பிரிக்கின்றன, அவை இணையும் முன் என் பாதங்கள் மீண்டும் பிரிக்கின்றன!
நான்கு பாதங்க்ள் மண்ணில் செயல்பட்டாலும், இரண்டு காலடி ஓசைகளே கேட்கின்றன! சந்தேகத்தொடு நீ திரும்புகையில், நான் சந்தோசத்தோடு உன் முகம் பார்க்கிறேன்!
வழியில் பள்ளிச் சிறுவர்கள் வானவில்லைக் கண்டு பரவசம் அடைகின்றனர், கூடவே நீயும்... ஆனால் உன் சந்தோசத்தில் நான் ஆயிரம் வானவில்களை பார்ப்ப்தறியாமல்........
உன் வீடிருக்கும் தெரு வந்ததும் நீ என்னைத் திரும்பிப் பார்க்கிறாய்! சிவப்பு விளக்கு விழுந்த இரயில் பாதையென என் அன்றைய காதல் பயணம் முடிவடைகிறது!
உன் பிரிவுக்கு வருந்திக் கொண்டே என் வீட்டிற்கு திரும்புகையில், வானில் ஒரு வானவில் மீண்டும் உன்னை நினைவூட்டுகிறது!
Monday, December 04, 2006
காதல் பூதமே காதல் பூதமே என்மேல் ஏன் உனக்கு கோபமே இதயம் கிழித்தெடுத்து கண்கள் கொத்தித் தின்று உயிரை உருகவிட்டுப் போகிறாய் மீதம் இருக்கும் நானும் கூட அவளை நினைக்கத்தான் என்கிறாய்
வேண்டாம் போய்விடு வேண்டாம் போய்விடு காதல் பூதமே போய்விடு
இறுதிவரைக்கும் இதயம் இணைந்திருக்கும் நட்பைப் போல உன் காதல் இல்லையே கண்ணீரில் நனையவைக்கும் கவலையில் மூழ்கடிக்கும் உன் காதல்படு தொல்லையே
வேண்டாம் போய்விடு வேண்டாம்போய்விடு காதல் பூதமே போய்விடு
Sunday, December 03, 2006
உன்னை வர்ணிக்க வார்த்தைகள் இல்லாத போதும் உன்னைப் பற்றி கவிதைகள் எழுத துடிக்கிறது என் மனது........................
Friday, December 01, 2006
நாவலின் கடைசி பக்கத்தைப் படிக்கும் ஆவல் எனக்கு, உன் ஒவ்வொரு பக்கத்தை படிக்கும் போதும்........
நான் பக்கத்தில் நிற்கும் போது, வெட்கத்தில் நனைகிறது ஒரு நிலா!