தமிழர் என்று சொல்லுவோம்!
தலை நிமிர்ந்து நிற்போம்!
எங்கேனும் நம்மை தூய தமிழில்
பேசச் சொன்னால் மட்டும்,
தலை குனிவோம்!
தமிழா!
நீ இந்தியனாய் இருப்பதில்
பெருமிதம் கொள்!
கர்நாடகம்
உனக்கான காவிரி நீரை
தர மறுக்காத வரை.................
தமிழா!
ஈழ மண்ணில்
உன் வேட்டிகட்டே
அவிழ்ந்து கிடக்கும் போது,
தமிழர் வீரம் போற்ற
இங்கே எதற்கு
உனக்கொரு ஜல்லிகட்டு?