Powered By Blogger

Friday, August 08, 2008


அன்பென்ற மழையில்
என்னை நாளும் நனைத்த
என் அம்மாவை
அருகினில் வைத்துக் கொண்டு
எப்படி தொழுவது
ஒரு கற்சிலயை கடவுளென்று

Sunday, July 27, 2008




உன் அசைவற்ற
புகைப்படம் கூட
என்னை எந்த அசைவுமற்று
பார்க்கச் செய்கிறது………..

Wednesday, April 16, 2008




உன் உடைந்த வளையல்களை


சேகரித்துதான்


மழைநாளில் அந்த வானம்


வானவில் காட்டுகிறதோ..........

Friday, April 04, 2008




உன்னைக் காண்பதை


நான் எனக்குள் திருவிழாவெனக்


கொண்டாடுகிறேன்,


அந்த திருவிழாவில்


என்னை நானே


தொலைத்தும் விடுகிறேன்.......

நீ என்னிடம் திருடிய இதயத்தை

எங்கே ஒளித்து வைத்திருப்பாய்

எனத் தெரியவில்லை!

ஆனால் அது நிச்சயம்

பல நூறு இதயங்களோடுதான்

அடைபட்டிருக்கும்..................

Wednesday, April 02, 2008


நீ மண்ணில் இருக்கும் போது

சொர்க்கம் விண்ணில் இருக்க வாய்ப்பே இல்லை

Friday, March 28, 2008


நீயே ஒரு ரிப்பன் கட்டிய

பரிசைப் போல்தான் இருக்கிறாய்,

பின்பு ஏன் நீ மறந்து வந்த

பரிசுப் பொருளுக்காக கலங்குகிறாய் ..................

Thursday, March 06, 2008


ஜன்னலோரம் வீசும் குளிர் தென்றல்,

பூக்கடையில் சிரிக்கும் வண்ணமயமான பூக்கள்,

மதிய நேரத்து மழைத் தூரல்,

வானொலி காற்றில் இரையும் மென்பாடல்

அத்தனையும் விட அழகாய் இருந்தது

பக்கத்தில் அமர்ந்திருந்த உன் சிரிப்பு..................

ஓட்டுத்துளை வழியே சொட்டு சொட்டாய் இறங்கி,
அது விழும் இடத்தில் வைத்த
பாத்திரத்தையும் அடிக்கடி நிரப்பி,
வேலைக்கு போய் வந்த அம்மாவின்
உறக்கத்தை கெடுப்பதற்கு முன்பு வரை
பிடித்துதானிருந்தது மழையும் ................

Saturday, January 19, 2008







இனிப்பாகத்தான் இருந்தது பொங்கலும்,
பசியென்று வாசல் வந்த
தெருவோரக் கிழவியைக் காணாத வரை..................