Powered By Blogger

Friday, March 28, 2008


நீயே ஒரு ரிப்பன் கட்டிய

பரிசைப் போல்தான் இருக்கிறாய்,

பின்பு ஏன் நீ மறந்து வந்த

பரிசுப் பொருளுக்காக கலங்குகிறாய் ..................

Thursday, March 06, 2008


ஜன்னலோரம் வீசும் குளிர் தென்றல்,

பூக்கடையில் சிரிக்கும் வண்ணமயமான பூக்கள்,

மதிய நேரத்து மழைத் தூரல்,

வானொலி காற்றில் இரையும் மென்பாடல்

அத்தனையும் விட அழகாய் இருந்தது

பக்கத்தில் அமர்ந்திருந்த உன் சிரிப்பு..................

ஓட்டுத்துளை வழியே சொட்டு சொட்டாய் இறங்கி,
அது விழும் இடத்தில் வைத்த
பாத்திரத்தையும் அடிக்கடி நிரப்பி,
வேலைக்கு போய் வந்த அம்மாவின்
உறக்கத்தை கெடுப்பதற்கு முன்பு வரை
பிடித்துதானிருந்தது மழையும் ................