Powered By Blogger

Wednesday, May 29, 2019

யார் சார் இங்க முட்டாள்?






ஸ்டெர்லைட் போராட்டத்தில போராடி 
இறந்து  போனவங்க  முட்டாளா ?

இல்லை அதை வெறும்  செய்தியா 
கடந்து  போறவங்க  முட்டாளா  ?

மக்களுக்காக போராடி தொலைந்து போன 
முகிலன் முட்டாளா?  
இல்லை முகிலன பாதுகாக்க தெரியாத
இந்த பொதுமக்கள்   
முட்டாளா ?

திறமை இருந்தும் மெடிக்கல்  சீட் கிடைக்கலனு 
இறந்து போன 
புத்திசாலி  அனிதா முட்டாளா ?
இல்லை எது நடந்தா எனக்கென்னனு 
இருக்கிற இந்த ஊமைச்சமூகம் முட்டாளா 

இலங்கை தமிழர்க்காக கரிகட்டையான 
முத்துக்குமார் முட்டாளா? 
இல்லை கஜா   புயல மறந்திட்டு 
பிக் பாஸ் சுஜாவ ரசிக்கிறவன் முட்டாளா? 


ஒழுங்கா ஓட்டு போட்டா சந்தோஷமா இருக்கலாம்னு 
கத்துறவன் முட்டாளா? 
இல்லை சந்தோஷமா காசுக்கு
ஓட்ட வித்துட்டு ஆயுசுக்கும் கஷ்டபடுறவன் முட்டாளா?


விவசாயிகள் தன்மானம் போய் 
தற்கொலை பண்ண கூடாதுனு 
தன் மானத்தை விட்டு அம்மணமா நின்னானே 
அவன் முட்டாளா ?
இன்னிக்கு விவசாயி விஷம் வாங்க 
ஆறாயிரம்னதும் அடிச்சு பிடிச்சு முதல் ஆளா போய் வாங்குறானே அவன் முட்டாளா ?

அஞ்சு வருசமா கொள்ளையடிச்சதுல 
அஞ்சு சதவீதம் செலவு பண்ணாலே 
திரும்ப ஆட்சிக்கு வந்திடலாம்னு நினைக்குற
 அரசியல்வாதி முட்டாளா?
இல்லை அந்த அரசியல்வாதி போடுற பிச்சைய வாங்குற எச்சைங்க முட்டாளா?


யார் சார் இங்க முட்டாள்?

Friday, June 08, 2018


முன் நெற்றியில் 

காற்று உரசிட தொடங்கும் 

உன் கார் கூந்தல் நடனம் 

அதை பார்த்திட மட்டுமே 

நீ தூரிகை ஓவியமில்லை 

என்பது திண்ணம் 

Saturday, July 07, 2012


மழை தொட்டுச் சென்ற சாலையில்,
உன் பாதங்கள் விட்டுச் செல்லும் 
ஓவியங்களை....   எங்கனம்  நான் 
பத்திரப் படுத்திக்கொள்ள......  

Monday, June 25, 2012

அன்புள்ள அம்மாவுக்கு


கருவறையில் வசிக்கும் 
கடவுள்களுக்கு மத்தியில்
கருவறை சுமக்கும்
கடவுள் அல்லவா நீ .




தங்கம் ஒரு போதும்   
உரசிப் பார்க்காத  
தங்கமல்லவா நீ.

Tuesday, April 17, 2012



சிறுநீர்தான் என்றாலும் கூட,                     
அது என்னை பெருவெள்ளமாய் 
இழுத்துச்செல்கிறது ,                  
அன்பென்னும் ஆழ்கடலுக்கு……

Tuesday, February 22, 2011


உன் மீதான என் அன்பையும்
என் மீதான உன் அன்பையும் சேர்த்து
சுருக்கமாய் ஒரே வார்த்தையில்
சொல்லி விடுகிறது காதல்,
காதல் என்று……..

இதயத்தால் சுமக்க முடியாத படியும்,
பூக்களால் எளிதில்
சுமந்து செல்லும் படியுமாய்
இருக்கிறது இந்த காதல்
………