காவல் நிலையம் செல்ல மனம் இல்லை!
பத்திரிக்கைக்கு அறிவிப்பு கொடுக்க பணமில்லை!
எடுத்த பொருளை அதே இடத்தில்
வைத்து விடவும் தோன்றவில்லை!
பேருந்தில் என்னைத் தவிர்த்து வேறு ஆளும் இல்லை!
ஆனாலும் என் கையிலிருக்கும் ஒற்றைக் காலணியை,
உரிய மழலையிடம் சேர்க்க வேண்டும்
எனத் துடிக்கிறது மனது............