கவிதைக்கு பொய்யழகு ஆனால் உன்னைபற்றி நான் எழுதும் கவிதைகள் மட்டும் அதற்கு விதி விலக்கு..... __r.v.karthik
Monday, August 21, 2006
அழகி
சோப்புக் குமிழ்களுக்குள்
உன் சுவாசம் நிரப்பி
எனை நோக்கி அனுப்பிக் கொண்டிருந்தாய் !
அவை எனைத்தொட்டு
வெடிக்கும் வரை
எனக்குத் தெரியவில்லை!
அவை நீ எனக்களித்த
பிறந்தநாள் முத்தங்கள் என்று ......
Monday, August 07, 2006
மலராய் மண்ணில்
தவழ்ந்திருந்த
நான் இன்று அதே மண்ணில்
சருகாகிக் கிடக்கிறேன் !
எத்தனை பேருக்கு கிடைக்கும்
பிறந்து வளர்ந்த வீடே
இடிந்து கல்லறையாய் !
என் அடுத்த பிறப்பிலாவது
யுத்தங்களை மறந்திருக்கட்டும்
இந்த உலகம்...
இப்படிக்கு
நேற்றைய இஸ்ரேல்
தாக்குதலில் இறந்த
லெபனான் சிறுமியின் சடலம் !
Subscribe to:
Posts (Atom)