Powered By Blogger

Tuesday, November 27, 2007


சிறுவயதில் கிணற்றுக்குள் தவறி விழுந்து

குரலெழுப்ப முடியாமல்

குற்றுயிராய் உயிர்பிழைத்த போதும்


பள்ளியில் புதிதாய் வந்த ஆசிரியர்

என்னை வகுப்பில் வாழ்த்து பாடச் சொல்ல,

வகுப்பில் அனைவரும் சிரித்து நான் அழுத போதும்


பெண் பார்க்கும் நிகழ்வில்

வாய் ஊனத்திற்கு தனியாய்

மாபிள்ளை வீட்ட்டார் வரதட்சணைகேட்ட போதும்

இல்லாத வலி இப்போது


அழுகின்ற குழந்தைக்கு

தாலாட்டு பாட முடியாததால் ஏற்படுகிறது

Monday, November 26, 2007


சுதந்திர தினத்தன்று

சமாதான புறாக்களை

பறக்க விட்டுவிட்டு

ஏவுகணைகளின் அணிவகுப்பையும்

ஏற்றுக்கொள்கிறார்

குடியரசுத் தலைவர்






நான் உன் வளையைகளுக்குள்



புகுந்துவிடும்படி



எங்கனம் ஆனேன்?



நீ என் கனவுகளில்



வளைய வந்ததினால்தானே!

Saturday, November 24, 2007


முன்பொருநாள் நான்
தேடித்தேடி வாங்கிய பூந்தொட்டிகளும்
பார்த்து பார்த்து அமைத்த பூந்தோட்டமும்
இன்று நான் கவனிக்காத போதும்
பூத்துக் குலுங்குகின்றன
நான் விதவையென்பதை கவனிக்காதபடி