Powered By Blogger

Thursday, November 30, 2006

எனதுயிரே நீ எங்கே
உன்னைத் தேடிடும் விழிகள் இங்கே

மூன்று பொழுதும்
உன்னை நினைக்காமல்
உறக்கம் வருவதில்லை
உறங்கிடும் போதும்
உன் முகம் விழிகளில் மறைவதில்லை

நேற்று ரசித்து ரசித்து எழுதிய கவிதை

இன்று ஏனோ பிடிக்கவில்லை
உன் பெயரை எழுதிடவோ
காகிதங்கள் போதவில்லை

Wednesday, November 29, 2006


பக்கம் பக்கமாய்
கவிதைகள் எழுதி தயாரான பின்னும்
உன் பக்கத்தில்
நான் வெறும் காகிதமாய்த்தான் நிற்கிறேன்..........

Tuesday, November 07, 2006


நீ விரும்புகிறவர் பட்டியலில்
இல்லாத போதும்
சந்தோஷம் எனக்கு
உன்னை விரும்புகிறவர் பட்டியலில் இருப்பதால்

Sunday, November 05, 2006


மறுஜென்மத்தில் நீ என் அன்பை
மறந்தாலும் ஞாபகப்படுத்தவே,
நீ கண்மூடியபிறகு
நான் கட்டிவைத்தேன் தாஜ்மஹாலை

காகிதத்தைக் கூட
எறும்புகள் மொய்க்கும்
அதில் எழுதியிருப்பது
உன்னைப்பற்றி என்றால்..................

உன்னைப் படைத்த பிரம்மன்
உன் மிச்சத்தை
என்னிடம் கொடுத்து அனுப்பியிருக்கிறான்
உன்னை இன்னும் அழகாக்க.........

















சிலையை செதுக்கும் போது
சிலையின் வலியை
சிற்பியே ஏற்றுக்கொண்டது போல் இருக்கிறது,
உன் அழகை என் பார்வையால்
இன்னும் அழகாக செதுக்கும் போது...
நான் நானாகவே இருந்தேன்
உன்னைக் காணாதவரையில்.................

Friday, November 03, 2006

அழகு


வானில் வண்ணங்களைச் சுமப்பதால்
வானவில் அழகானது,
மண்ணில் உன்
எண்ணங்களைச் சுமப்பதால்
நானும் அழகானேன்.....

ஒருதலை.....


என் இதயத்தை
தொலைத்த போது
இல்லாத வலி
இன்று நீ
திருப்பிக் கொடுத்தபோது.......

முதல் பார்வை


உன் கண்களின் பார்வையில்
என் முகவரியைத் தொலைத்துவிட்ட நான்
அதை உன் பாதச் சுவடுகளில்
திரும்பப் பெற்றேன்.........

உன் நினைவுகள்


உனை எண்ணி முடிகையில்
அநேகமாய்
வானத்தின் எல்லையில்
நின்றிருப்பேன் நான்....................