எனதுயிரே நீ எங்கே
உன்னைத் தேடிடும் விழிகள் இங்கே
மூன்று பொழுதும்
உன்னை நினைக்காமல்
உறக்கம் வருவதில்லை
உறங்கிடும் போதும்
உன் முகம் விழிகளில் மறைவதில்லை
நேற்று ரசித்து ரசித்து எழுதிய கவிதை
இன்று ஏனோ பிடிக்கவில்லை
உன் பெயரை எழுதிடவோ
காகிதங்கள் போதவில்லை

No comments:
Post a Comment