Powered By Blogger

Monday, August 07, 2006



மலராய் மண்ணில்
தவழ்ந்திருந்த
நான் இன்று அதே மண்ணில்
சருகாகிக் கிடக்கிறேன் !
எத்தனை பேருக்கு கிடைக்கும்
பிறந்து வளர்ந்த வீடே
இடிந்து கல்லறையாய் !
என் அடுத்த பிறப்பிலாவது

யுத்தங்களை மறந்திருக்கட்டும்
இந்த உலகம்...
இப்படிக்கு
நேற்றைய இஸ்ரேல்
தாக்குதலில் இறந்த
லெபனான் சிறுமியின் சடலம் !

No comments: