Powered By Blogger

Wednesday, May 29, 2019

யார் சார் இங்க முட்டாள்?






ஸ்டெர்லைட் போராட்டத்தில போராடி 
இறந்து  போனவங்க  முட்டாளா ?

இல்லை அதை வெறும்  செய்தியா 
கடந்து  போறவங்க  முட்டாளா  ?

மக்களுக்காக போராடி தொலைந்து போன 
முகிலன் முட்டாளா?  
இல்லை முகிலன பாதுகாக்க தெரியாத
இந்த பொதுமக்கள்   
முட்டாளா ?

திறமை இருந்தும் மெடிக்கல்  சீட் கிடைக்கலனு 
இறந்து போன 
புத்திசாலி  அனிதா முட்டாளா ?
இல்லை எது நடந்தா எனக்கென்னனு 
இருக்கிற இந்த ஊமைச்சமூகம் முட்டாளா 

இலங்கை தமிழர்க்காக கரிகட்டையான 
முத்துக்குமார் முட்டாளா? 
இல்லை கஜா   புயல மறந்திட்டு 
பிக் பாஸ் சுஜாவ ரசிக்கிறவன் முட்டாளா? 


ஒழுங்கா ஓட்டு போட்டா சந்தோஷமா இருக்கலாம்னு 
கத்துறவன் முட்டாளா? 
இல்லை சந்தோஷமா காசுக்கு
ஓட்ட வித்துட்டு ஆயுசுக்கும் கஷ்டபடுறவன் முட்டாளா?


விவசாயிகள் தன்மானம் போய் 
தற்கொலை பண்ண கூடாதுனு 
தன் மானத்தை விட்டு அம்மணமா நின்னானே 
அவன் முட்டாளா ?
இன்னிக்கு விவசாயி விஷம் வாங்க 
ஆறாயிரம்னதும் அடிச்சு பிடிச்சு முதல் ஆளா போய் வாங்குறானே அவன் முட்டாளா ?

அஞ்சு வருசமா கொள்ளையடிச்சதுல 
அஞ்சு சதவீதம் செலவு பண்ணாலே 
திரும்ப ஆட்சிக்கு வந்திடலாம்னு நினைக்குற
 அரசியல்வாதி முட்டாளா?
இல்லை அந்த அரசியல்வாதி போடுற பிச்சைய வாங்குற எச்சைங்க முட்டாளா?


யார் சார் இங்க முட்டாள்?

No comments: