எனதுயிரே நீ எங்கே
உன்னைத் தேடிடும் விழிகள் இங்கே
மூன்று பொழுதும்
உன்னை நினைக்காமல்
உறக்கம் வருவதில்லை
உறங்கிடும் போதும்
உன் முகம் விழிகளில் மறைவதில்லை
நேற்று ரசித்து ரசித்து எழுதிய கவிதை
இன்று ஏனோ பிடிக்கவில்லை
உன் பெயரை எழுதிடவோ
காகிதங்கள் போதவில்லை
கவிதைக்கு பொய்யழகு ஆனால் உன்னைபற்றி நான் எழுதும் கவிதைகள் மட்டும் அதற்கு விதி விலக்கு..... __r.v.karthik
Thursday, November 30, 2006
Wednesday, November 29, 2006

பக்கம் பக்கமாய்
கவிதைகள் எழுதி தயாரான பின்னும்
உன் பக்கத்தில்
நான் வெறும் காகிதமாய்த்தான் நிற்கிறேன்..........
Tuesday, November 07, 2006

நீ விரும்புகிறவர் பட்டியலில்
இல்லாத போதும்
சந்தோஷம் எனக்கு
உன்னை விரும்புகிறவர் பட்டியலில் இருப்பதால்
Sunday, November 05, 2006

உன்னைப் படைத்த பிரம்மன்
உன் மிச்சத்தை
என்னிடம் கொடுத்து அனுப்பியிருக்கிறான்
உன்னை இன்னும் அழகாக்க.........
உன் மிச்சத்தை
என்னிடம் கொடுத்து அனுப்பியிருக்கிறான்
உன்னை இன்னும் அழகாக்க.........

சிலையை செதுக்கும் போது
சிலையின் வலியை
சிற்பியே ஏற்றுக்கொண்டது போல் இருக்கிறது,
உன் அழகை என் பார்வையால்
இன்னும் அழகாக செதுக்கும் போது...
நான் நானாகவே இருந்தேன்
உன்னைக் காணாதவரையில்.................
உன்னைக் காணாதவரையில்.................
Friday, November 03, 2006
முதல் பார்வை

உன் கண்களின் பார்வையில்
என் முகவரியைத் தொலைத்துவிட்ட நான்
அதை உன் பாதச் சுவடுகளில்
திரும்பப் பெற்றேன்.........
Subscribe to:
Comments (Atom)





