Powered By Blogger

Friday, July 07, 2006







பாப்பா பாட்டு

ஜாதிகள் உள்ளதடி பாப்பா !
அவை ஷ்காலர்ஷிப்பும் தருமடி பாப்பா
!

கல்வி ஏடுகள் உள்ளதடி பாப்பா
!
அவை பண நோட்டுக்களுக்கேதானடி பாப்பா
!

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
லஞ்சங்கள் தானடி பாப்பா
!

ஆணுக்கு சரிசமர் பெண் எனும் திட்டங்கள்
விட்டத்தில் நிற்குதடி பாப்பா
!

நள்ளிரவில் நீ தனியே நடக்கும் வரை
இந்நாட்டிற்கு சுதந்திரம் இல்லையடி பாப்பா
!

ஆனால் அந்த சுதந்திரம் கிடைத்திட
யாதுமொரு சாத்தியம் இல்லையடி பாப்பா
!

மேலைநட்டு குளிர்பான
குடுவைகள் நிரம்புதடி பாப்பா
!

ஆனால் தமிழர் ஏழைக் குடிசை தன்னில்
குடிநீர் தாகமடி பாப்பா
!

காக்கும் கடவுள் அன்று
திரௌவுபதியின் கற்பை காத்தாரடி பாப்பா
!

ஆனால் காக்கும் காவலர்களே இன்று
கற்பை களவாடுவர் அறிந்துகொள் பாப்பா
!

ஒடும் விளையாட்டு போதுமடி பாப்பா !
இந்த சமுதாயத்தை களையெடுக்க நீ புறப்புடு பாப்பா
!



No comments: