
மழை விழுது
மண்ணைத் தொடுது
மனதில் குளிர் நிரப்பி
புது கவிதை தருது
நீங்கள் குடை பிடித்து
அதன்வழி மறைப்பதால்
அது சில நேரங்களில்
வராமலே போய்விடுகிறது
வறட்சி தருகிறது.
மழை ஒரு குழந்தை
அழுது கொண்டே பிறப்பதால்
மழை ஒரு பெண் நிலம்
நோக்கி பயணிப்பதால்
மழை ஒரு விருந்தாளி
நாம் அவரை வரவேற்போம்

No comments:
Post a Comment