
குயிலென குரல் கொண்டாள் !
மயிலென நடைகொண்டாள் !
பூமணம் வீசும் கூந்தல்கொண்டாள்!
தென்றலெனெ தேகம்கொண்டாள் !
கழுத்தென வெண்சங்கு கொண்டாள்!
கரங்களென செங்காந்தள்கொண்டாள்!
வளை போட வாழை கொண்டாள் !
நடை போட நதியைகொண்டாள் !
பூங்கொடி இடைகொண்டாள் !
தேன் சிந்தும் அதரம் கொண்டாள் !
மான் கொம்பென மார் கொண்டாள்!
முழு மதியென முகம்கொண்டாள் !
இவை அத்தனையும்
அவள் கொண்டுவிட்டு
என்னை காதல் கொள்ளாதே என்கிறாள்!

No comments:
Post a Comment