Powered By Blogger

Saturday, July 08, 2006


காவிரி

உன் மீது கற்கள் எறிந்தும்
காகிதக் கப்பல்கள் விட்டும் ரசித்தேன்
பால்ய வ்யதில் .....
வான் பொய்ப்பினும்
தான் பொய்யாக் காவிரியின்
புகழை படித்து மகிழ்ந்தேன்
பள்ளி வயதில் ....
உன்மேல் தாவியும்
நீந்தியும் மகிழ்ந்தேன்
பருவ வயதில்....
இன்று உன்னில் தெரியும்
கானல் நீரை மட்டும்
ரசித்துச் செல்கிறேன் மீண்டும்
இவ்வழி வர மனமில்லாமல் ...

No comments: